திமுக கூட்டணியில் விரிசல்?… காங்கிரஸின் அடுத்த நகர்வு… தமிழகம் வரும் ராகுல் காந்தி… ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சமீப காலமாகவே ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என குரல் எழுப்பி வருவதால் ஸ்டாலினுக்கு இது பெரிய சிக்கலாகவே மாறி உள்ளது. கூடுதல் தொகுதிகளை ஸ்டாலின் ஒதுக்காத பட்சத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை. காங்கிரஸ் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள நிலையில் திமுகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது

இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி வலியுறுத்தி வருகிறது. இதற்கு திமுக மறுப்பு தெரிவித்த நிலையில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் இணைய காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் விஜயின் ஜனநாயகன். திரைப்பட தணிக்கை விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மாத இறுதியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தமிழகம் வரும் போது இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.