பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான அமர் சிங் சாகல், பங்குச்சந்தை மோசடியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்த விரக்தியில் தனது கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்ட ஒரு மர்ம கும்பல், நிதி ஆலோசகர்கள் என நம்பவைத்து இவரை ‘F-777’ என்ற போலி குழுவில் சேர்த்துள்ளது.
ஐ.பி.ஓ பங்குகள் மூலம் பெரும் லாபம் தருவதாகக் ஆசை காட்டிய அந்த கும்பல், போலியான இணையதளக் கணக்குகளைக் காட்டி இவரிடமிருந்து சுமார் 8.10 கோடி ரூபாயைச் சுருட்டியுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முன்னாள் ஐ.ஜி, தற்கொலைக்கு முயலும் முன் எழுதிய கடிதத்தில், இந்த மோசடி குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என உருக்கமாகக் கோரியுள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், பாட்டியாலா போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இணையவழி முதலீடுகளில் பொதுமக்கள் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…