அண்ணாமலை புலிகள் காப்பகத்தின் அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ‘செஸ்ட்நட் ஹெடட் பீ-ஈட்டர்’ (Chestnut-headed Bee-eater) பறவைகள் கூட்டமாகச் சேர்ந்து வானில் பறந்தபடி இசைப்பது போன்ற சத்தத்தை எழுப்பும் அபூர்வ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் முரளி பதிவு செய்த இந்த அழகிய காட்சியை ஐஏஎஸ் அதிகாரி சுப்பிரியா சாஹூ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பறவைகள் தங்களின் பாதுகாப்புக்காகவும், வேட்டையாடுவதற்காகவும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதை இது உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காட்சியின் பிரமிப்பை கண்டு வியந்த நெட்டிசன் ஒருவர், இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதோ என ஐயம் எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சுப்பிரியா சாஹூ, இது முற்றிலும் இயற்கையானது என்றும் புகைப்படக் கலைஞரின் கடின உழைப்பை மதிக்க வேண்டும் என்றும் விளக்கமளித்தார். சுற்றுப்புறச் சூழலில் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பறவைகளின் குழு உணர்வு, மனிதர்களுக்கு ‘ஒற்றுமையே பலம்’ என்ற பாடத்தைக் கற்றுக்கொடுப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…