CINEMA
‘இது நம்முடைய ஸ்பெஷல் anniversary ‘… அன்பு மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறி நடிகர் நரேன் வெளியிட்ட பதிவு…
நடிகர் நரேன் ‘நிழல் கூத்து’ என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். இவர் தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது முதல் தமிழ் படமே சூப்பர் ஹிட் வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அடுத்தடுத்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.
குறிப்பாக நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம் அஞ்சாதே போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கியதால் தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானார். இவ்வாறு தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் நரேன்.
இவர் 2007ல் மஞ்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2008 இல் தன்மையா என்கிற மகள் பிறந்தார். தன்மையா பிறந்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் சமீபத்தில் நரேனின் மனைவி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் நரேன். இவர் இன்று தனது திருமண நாளை கொண்டாடுகிறார். தன் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறி நடிகர் நரேன் வெளியிட்ட பதிவானது ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
View this post on Instagram