ALERT: வங்கக்கடலில் மீண்டும் உருவானது புயல் சின்னம்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!

By Nanthini on கார்த்திகை 2, 2025

Spread the love

மேலடுக்கு சுழற்சியால் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.