அவங்க முகத்தை பார்த்து கூட மனசு மாறவில்லையா…? “பெற்ற பிள்ளைகளின் கழுத்தை அறுத்த தாய்…” அமெரிக்காவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

By Devi Ramu on ஆவணி 24, 2026

Spread the love

அமெரிக்காவின் நார்த் டகோட்டா மாநிலத்தில் உள்ள மேண்டன் பகுதியில், தாய் ஒருவர் தனது சொந்தக் குழந்தைகள் மூவரின் கழுத்தை அறுத்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி, காய்லி எர்ஹார்ட் என்ற அந்தப் பெண், தனது கணவரிடமும் பாட்டியிடமும் “உங்கள் குழந்தைகளிடம் விடைபெற்றுக் கொள்ளுங்கள்” எனக் கூறி கத்தியை காட்டி வீட்டை விட்டு வெளியே விரட்டியுள்ளார். பின்னர் வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு, தனது 5 மாதக் குழந்தை, 3 வயதுக் குழந்தை மற்றும் 1 வயதுக் குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் 5 மாதப் பாலகனும் 3 வயதுக் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 1 வயதுக் குழந்தை அறுவை சிகிச்சைக்குப் பின் உயிருக்குப் போராடி வருகிறது.இக்கொடூரக் குற்றத்தைச் செய்த தாயைக் காவல் துறையினர் கைது செய்து, இரு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றம் அவருக்கு 3 மில்லியன் டாலர் பிணைத் தொகையை (Bond) நிர்ணயித்துள்ளது. சமூகத்தில் பரவும் இத்தகைய குற்றப் செய்திகளின் தாக்கமே இத்தகைய கொடூரச் செயல்களுக்குக் காரணம் எனக் கூறிச் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.