சிமெண்ட் கல்லில் 11 மாத குழந்தையின் தலையை அடித்து கொன்ற கொடூர தாய்… கிணற்றில் காத்திருந்த அதிர்ச்சி… பின்னணியில் இருந்த திடுக்கிடும் காரணம்…!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், தனது மறுமண வாழ்விற்கு தடையாக இருப்பான் என்ற காரணத்திற்காக 11 மாதக் குழந்தையை தாயே கொலை செய்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 22 வயது பெண், கடந்த மார்ச் 8-ஆம் தேதி தனது மகனின் தலையை சிமெண்ட் மேடையில் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், குழந்தையின் உடல் மிதக்காமல் இருப்பதற்காக ஒரு பையில் கற்களை நிரப்பி, அதனை அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு, எவ்வித தடயமும் இன்றி தலைமறைவாகியுள்ளார்.

குழந்தையைக் கொன்ற பிறகு, அந்தப் பெண் தனது வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஷிரூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு தனக்கு குழந்தை இருப்பதை மறைத்து, ஒரு திருமண முகவர் மூலம் வேறொருவரை மறுமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையில், அந்தப் பெண் மற்றொரு ஆணுடன் இருக்கும் புகைப்படத்தைக் கண்ட அவரது முதல் கணவர், தனது மகனைத் திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண் முறையான பதில் அளிக்காமல் தவிர்த்ததால், சந்தேகமடைந்த தந்தை ஏப்ரல் 5 அன்று ரஞ்சன்காவ்ன் எம்.ஐ.டி.சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் மகாதேவ் வாக்மோட் தலைமையிலான தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், ஷிரூர் தாலுக்காவில் இருந்த அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்தனர். தொடக்கத்தில், குழந்தை தவறி விழுந்து இறந்ததாகக் கூறி நாடகமாடிய அவர், போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். சுற்றுலா சென்றபோது குழந்தை தொடர்ந்து அழுததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் தனது இரண்டாவது திருமணத்திற்கு குழந்தை தடையாக இருப்பான் என்ற எண்ணமே இந்த கொலைக்குக் காரணம் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலீஸார் அவர் அடையாளம் காட்டிய கிணற்றில் இருந்து குழந்தையின் உடலை மீட்டனர். முதல் கணவர் கொடுத்த புகாரின் பேரில், தற்போது அந்தப் பெண் மீது பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் கொலை (பிரிவு 103) மற்றும் ஆதாரங்களை மறைத்தல் (பிரிவு 238) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெற்ற தாயே தனது சுகவாழ்விற்காகப் பிஞ்சு குழந்தையைத் தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

1 மணத்தியாலம் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

2 மணத்தியாலங்கள் ago