இன்னைக்கு உன் ரத்தத்தைப் குடிக்காம விடமாட்டேன்… சீறிய பாம்பை துண்டு துண்டாகக் குதறிய கீரி… கிராமத்தில் நடந்த மரண போராட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் கோமரம் பீம் ஆசிஃபாபாத் மாவட்டத்திற்குட்பட்ட பெஜ்ஜூர் மண்டலம், நாகுலவாய் கிராமத்தில் அபூர்வமான இயற்கை நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. பொதுவாகவே பாம்பிற்கும் கீரிக்கும் இடையேயான பகை உலகறிந்த ஒன்று என்றாலும், கிராமத்தின் நடுவே பொதுமக்கள் பார்க்கும் வகையில் இவை இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

சாலையோரப் பகுதியில் பாம்பும் கீரியும் ஒன்றை ஒன்று தாக்கித் தீவிரமாகச் சண்டையிட்டுக் கொண்டன. இந்த மோதலின் போது, கீரி தன் வேகமான நகர்வுகளாலும் தற்காப்புத் திறனாலும் பாம்பை நிலைகுலையச் செய்தது. கீரி பாம்பின் உடலிலும் தலையிலும் பலமுறை பலமாகக் கடித்து அதனைப் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கி, வீழ்த்த முயன்றது. கீரியின் தொடர் தாக்குதலால் பாம்பினால் தப்பித்துச் செல்ல முடியாமல் கடுமையாகப் போராடியது.

   

https://twitter.com/pulsenewsbreak/status/2098716951904456905/video/1

   

இவ்விரண்டிற்கும் இடையே நடந்த இந்த உக்கிரமான சண்டையில் பாம்பு படுகாயமடைந்தது. கீரியின் தீவிரத் தாக்குதலால் பலத்த காயமடைந்த அந்தப் பாம்பு, இறுதியில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அப்பகுதி உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இயற்கையின் இந்த அபூர்வமான சண்டைக் காட்சியைக் கிராம மக்கள் சிலர் தங்கள் அலைபேசியிலும் படம்பிடித்துள்ளனர்.