SHOCKING VIDEO: “ரொம்ப கொள்ளையடிக்குறீங்க” ரயிலில் உணவு விலையை தட்டிக்கேட்ட நபர்… பெல்ட் மற்றும் தடியால் கொடூரமாக தாக்கிய கும்பல்…!!

By Soundarya on தை 3, 2026

Spread the love
மத்தியப் பிரதேசத்தின் பினாவைச் சேர்ந்த 25 வயது நிஹால் சிங், தனது குடும்பத்துடன் அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, ஐஆர்சிடிசி  நிர்ணயித்த ₹110 விலையுள்ள சைவ உணவிற்கு விற்பனையாளர்கள் ₹130 கேட்டுள்ளனர். இந்த கூடுதல் விலையை நிஹால் கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த உணவு விற்பனையாளர்கள், ஜான்சி ரயில் நிலையம் அருகே அவரை பெல்ட் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். குடும்பத்தினர் மற்றும் சக பயணிகள் கண்முன்னே நடந்த இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட நிஹால் சிங் இது குறித்து ஜான்சி ரயில்வே காவல்துறையிடம்  புகார் அளித்தும், உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கூடுதல் கட்டணத்தைச் ‘சேவைக் கட்டணம்’ என்று விற்பனையாளர்கள் நியாயப்படுத்திய நிலையில், இது ரயில்களில் நடக்கும் ‘உணவு மாஃபியா’வின் அராஜகம் எனப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.