டெல்லி மெட்ரோ ரயில் நிலைய நடைமேடையில் நடுத்தர வயது நபர் ஒருவர் பகிரங்கமாக சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கண்ணாடி நடைபாதையின் அருகே நின்று பொறுப்பற்ற முறையில் இச்செயலில் ஈடுபடுவதை சக பயணி ஒருவர் தனது கைபேசியில் பதிவு செய்துள்ளார். தான் வீடியோ எடுக்கப்படுவதை உணர்ந்தவுடன், அந்த நபர் எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி அங்கிருந்து தப்பி ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Delhi Metro??😭 pic.twitter.com/WjYzRMJQA3
— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 19, 2026
ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் பயன்படுத்தும் பொது இடத்தில் அரங்கேறியுள்ள இந்த அநாகரீகச் செயல், பயணிகளிடையே குடிமை உணர்வு குறைந்து வருவதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. பொது சுகாதாரத்தைப் பாதிக்கும் வகையில் செயல்பட்ட அந்த நபர் மீது டெல்லி மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இச்சம்பவம் மெட்ரோ ரயில் நிலையப் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் ஒழுக்கநெறி குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
