வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
சாதாரண பகுதி சந்திர கிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும். ஆனால், இந்த முறை நிகழும் கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், அரிய காட்சியாகவும் அமையவுள்ளது.
வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த சந்திர கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும். உலகளவில் சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாகக் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
