“சாவிலும் பிரியாத காதல்!”… எங்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள்”… காதல் தம்பதி விபரீத முடிவு… கண்ணீர் மல்க வைக்கும் கடிதம்…!!!

Spread the love

மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த அருண் (28) மற்றும் செல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரியா (26) ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அருண் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் அவர் வீட்டிலேயே முடங்கியுள்ளார். அவரது மனைவி பிரியா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

வேலை இல்லாதது மற்றும் மருத்துவச் செலவுகள் காரணமாகக் குடும்பத்தில் நிலவிய நிதி நெருக்கடியால் அருண் கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த அவர், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மனைவியிடம் கூறியுள்ளார். தன் கணவர் இல்லாத வாழ்க்கையை வாழ விரும்பாத பிரியாவும் அவருடன் இணைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி, புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

தகவலறிந்த ஊமச்சிகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், “எங்கள் இறப்பிற்கு யாரும் காரணமில்லை; எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள்; எங்களுடைய இறப்பை முன்னிட்டு ஊர் கோவில் திருவிழாவை நிறுத்திவிட வேண்டாம்” என்று உருக்கமாக எழுதியிருந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

16 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

42 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

53 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

1 மணத்தியாலம் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

1 மணத்தியாலம் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

1 மணத்தியாலம் ago