எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய முன்னணி நடிகர் மற்றும் புகழ் பெற்ற நடிகர் ஆவார். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனகென தனிப்பாதை வகுத்து சிம்மாசனம் அமைத்து அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.

குடும்ப வறுமைக்காக நாடகங்கள் அளிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னால் நடிகராக உயர்ந்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே திராவிட சிந்தனைகள் சமூக நீதி கருத்துக்கள் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரின் படங்கள் வெளிவந்தாலே கெத்து தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் எம்ஜிஆர். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல். தன்னை நாடி கஷ்டம் என வருபவருக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர். அப்படி ஒரு நாள் ஒரு பெண்மணி எம்ஜிஆரை ஏமாற்ற நினைத்திருக்கிறார்.
அது என்னவென்றால் எம்ஜிஆர்-யை தேடி மிகவும் கஷ்டத்தில் இருப்பவர்கள் உதவி வேண்டுபவர்கள் நேராக எம்ஜிஆர் அவர்களின் ராமாபுரம் வீட்டுக்கே சென்றுவிடுவர். அதனால் எம்ஜிஆர் வீட்டு முன்பு ஒரு பெரிய கூட்டம் தினமும் இருக்கும். அவர்களது கஷ்டத்தை கேட்டு தீர்த்து விடுவார் எம்ஜிஆர். அப்படி ஒரு நாள் ஒரு வசதியான பெண்மணி எம்ஜிஆர் வீட்டு முன்னால் வந்து அவர் போட்டிருந்த நகைகள் எல்லாம் மறைவில் போய் கழட்டி வைத்துவிட்டு வரிசையில் நின்று கஷ்டப்பட்டவர் போல் எம் ஜி ஆர் இடம் இட்லி கடை வைத்து பிழைப்பு நடத்துகிறேன் எனக்கு ஒரு கிரைண்டர் வேணும் என்று கேட்டிருக்கிறார்.

உடனே எம் ஜி ஆர் அவர்களும் பணத்தை உதவியாளிடம் சொல்லிக் கொடுத்து அனுப்பினார். அந்தப் பெண்மணியும் வாங்கிவிட்டு வெளியே வரும்போது வீட்டின் வாட்ச்மேன் அவரை தடுத்து நிறுத்தி நீ நகையை கழட்டினத்தை நான் பாத்துட்டேன் ஐயா கிட்டையே நான் சொல்லிட்டேன் இருந்தாலும் நம்ம வீடு தேடி வந்தவங்களுக்கு கொடுத்து அனுப்பனும் என்று தான் ஐயா கொடுத்திருக்கிறார் அதனால இனிமேல் இப்படி பண்ற வேலைய வச்சுகாதே என்று திட்டி அனுப்பி இருக்கிறார். அப்படி தன்னை நாடி வந்தவர்க்கு எல்லாம் கை சிவக்க அள்ளிக் கொடுத்தவர் எம்ஜிஆர்.
