“கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஜாக்பாட்… இனி 3 நாள் லேட் ஆனாலும் கவலை வேண்டாம்!… ரிசர்வ் வங்கியின் அசத்தல் அறிவிப்பு”..!!!

Spread the love

கிரெடிட் கார்டு பயனர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் விதிகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, கிரெடிட் கார்டு கட்டணத்தைச் செலுத்துவதற்கான உரிய தேதி முடிவடைந்த பின்னரும், வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்கள் கூடுதல் ‘சலுகைக் காலம்’ (Grace Period) வழங்கப்படும். உதாரணமாக, ஒருவரது கட்டணத் தேதி 5-ஆம் தேதி என்றால், அவர் அபராதம் இன்றி 8-ஆம் தேதி வரை பணம் செலுத்த முடியும். இந்த மூன்று நாட்களுக்குள் கட்டணத்தைச் செலுத்தினால், வங்கிகள் தாமதக் கட்டணம் விதிக்கவோ அல்லது அந்தத் தகவலைக் கடன் தகவல் நிறுவனங்களுக்கு (CICs) அனுப்பவோ முடியாது.

மற்றொரு முக்கியமான மாற்றமாக, தாமதக் கட்டணங்கள் கணக்கிடப்படும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இனிமேல் தாமதக் கட்டணம் என்பது ‘செலுத்த வேண்டிய மொத்தத் தொகைக்கு’ (Total Amount Due) விதிக்கப்படாமல், கட்டணம் செலுத்த வேண்டிய தேதிக்குப் பிறகு இருக்கும் ‘நிலுவைத் தொகைக்கு’ (Outstanding Balance) மட்டுமே விதிக்கப்படும். இது வாடிக்கையாளர்கள் மீதான தேவையற்ற நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும். இருப்பினும், மூன்று நாள் காலக்கெடுவைத் தாண்டியும் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், அது உங்கள் சிபில் (CIBIL) போன்ற கடன் மதிப்பீட்டைப் பாதிக்கும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

மேலும், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தானாகவே முன்வந்து நிவாரணம் வழங்கவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்தப் புதிய கிரெடிட் கார்டு விதிகள் 2027 ஏப்ரல் 1 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பேரிடர் தொடர்பான நிவாரண விதிகள் முன்னதாகவே, அதாவது 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். இந்த மாற்றங்கள் அனைத்தும் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்குக் கூடுதல் அவகாசத்தையும், வெளிப்படையான கட்டண முறையையும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன.

Muthu Mani

Recent Posts

“2 லட்சம் சம்பளம் வாங்கியும் நிம்மதி இல்ல” இன்ஸ்டாகிராமில் மனைவியின் அந்தரங்க வீடியோக்கள்… ஏரியில் குதித்து கணவன் தற்கொலை… சிக்கிய பரபரப்பு கடிதம்..!!

ஐதராபாத்தில் மென்பொருள் பொறியாளர் சீதாராம் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது மனைவி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது…

3 minutes ago

சென்னையில் பயங்கரம்..! சேலை வியாபாரம் செய்துவந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வெட்டிக்கொலை… கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை..!!

சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்த பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மற்றும் தொழிலதிபரான நாகலட்சுமி (42), அவரது கணவர் சுப்பிரமணியனால் (52)…

8 minutes ago

அடுத்த அதிரடி..! இன்று ஒரே நாளில் ரூ.261 உயர்ந்த சிலிண்டர் விலை… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 19 கிலோ எடை கொண்ட…

21 minutes ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,400-க்கு விற்பனை.. இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி…!!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவைச் சந்தித்துள்ளது பொதுமக்களுக்குச் சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நேற்று மாலை ஒரு சவரன்…

24 minutes ago

பணம் டபுள் ஆகணுமா…? போஸ்ட் ஆபீஸில் ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்…! மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!

மத்திய அரசின் உத்தரவாதம் கொண்ட 'கிசான் விகாஸ் பத்திரம்' (KVP) திட்டம், பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த…

1 மணத்தியாலம் ago

BREAKING: அண்ணாமலைக்கு எம்பி பதவி… எல். முருகன் கொடுத்த அந்த க்ளு… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் அந்த ஒரு முடிவு….!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாநிலங்களவை (Rajya Sabha) எம்பி பதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன்…

1 மணத்தியாலம் ago