மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பிவண்டி பகுதியில் கழிவு நீர் ஓடையில் பெண்ணின் தலை எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண்ணின் உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த பெண் அதே பகுதியை சேர்ந்த முஸ்கான் (22) என்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் தாஹா என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் தன்னுடைய மனைவி போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்ததால் அவரை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கழிவுநீர் ஓடையில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த நபர் கொலைக்கான காரணத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால் காவல்துறையினர் குழப்பத்தில் உள்ளனர். இளம் பெண் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
