உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில், பர்தா அணியாமல் வெளியே வந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஃபரூக் என்ற நபர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர்களின் உடல்களை முற்றத்தில் கழிப்பறைக்காக தோண்டப்பட்ட குழியில் புதைத்து, கான்கிரீட்டால் மூடிவிட்டார். ஃபரூக்கின் மனைவி தஹிரா மற்றும் மகள்கள் அஃப்ரீன் மற்றும் சஹ்ரீன் ஆகியோர் ஐந்து நாட்களாக காணாமல் போனதை அடுத்து, ஃபரூக்கின் தந்தை தாவூத் எஃப்ஐஆர் பதிவு செய்திருந்தார். விசாரணையின் போது, ஃபரூக்கின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதை போலீசார் கவனித்தனர், இது தீவிர விசாரணைக்கு வழிவகுத்தது
இறுதியில் ஃபாரூக் தனது மனைவி மற்றும் மூத்த மகளை சுட்டுக் கொன்றதாகவும், இளைய மகளை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அவர்களின் உடல்களை முற்றத்தில் கழிப்பறைக்காக தோண்டப்பட்ட குழியில் மறைத்து வைத்ததாகவும், பின்னர் அது கான்கிரீட் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர.
