பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 4 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த கார் பக்தர்கள் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த மற்றொரு பெண் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநரை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
