டிராக்டரா..? இல்லை சொகுசு ஹோட்டலா..? ஹரியானா வாலிபரின் மிரட்டலான ஐடியா… நெட்டிசென்கள் ஷாக்…!!

By Swetha on ஆனி 19, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த ரோக்கி ஷாபுரியா என்ற விவசாயி, தனது மைத்துனரின் யோசனைப்படி 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு டிராக்டரை வாங்கினார். பின்னர், கூடுதலாக 4 லட்சம் ரூபாய் செலவழித்து, அந்த டிராக்டரை அனைத்து நவீன வசதிகளும் கொண்ட ஒரு நடமாடும் சொகுசு வீடாக மாற்றியுள்ளார். மொத்தம் 14 லட்சம் ரூபாய் செலவில் உருவான இந்த தனித்துவமான டிராக்டர், தற்போது செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த டிராக்டருக்குள் படுக்கை , சமையலறை, விசிறி, சன்ரூஃப் , பின் பக்க கேமரா மற்றும் குப்பைத்தொட்டி போன்ற பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மலைப்பகுதிகளில் பயணிக்கும்போது டிராக்டர் நிலைதவறி தூக்காமல் இருக்க, அதன் முன்பகுதியில் 150 கிலோ எடையுள்ள பம்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 பேர் வரை அமர முடியும் என்றும், 5 பேர் தாராளமாகப் படுத்து ஓய்வெடுக்கலாம் என்றும் ரோக்கி தெரிவித்துள்ளார்.

   

ரோக்கி தனது மனைவி மற்றும் மகனுடன் இந்த டிராக்டரிலேயே பல்வேறு ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே சார் தாம், பத்ரிநாத், கேதார்நாத், லடாக் மற்றும் சியாச்சின் போன்ற இடங்களுக்குச் சென்றுள்ள இவர், தற்போது நேபாளப் பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகருக்கு வந்து மகாகாளேஸ்வரரைத் தரிசித்துள்ளார். இந்த டிராக்டர் பயணம் தங்களுக்கு ஹோட்டல் செலவுகளை மிச்சப்படுத்துவதோடு, நினைத்த நேரத்தில் ஓய்வெடுத்துப் பயணிக்கப் பெரிதும் உதவுகிறது என அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.