BREAKING: தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

By Swetha on ஆவணி 20, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உணவுத்துறை அமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பின்படி, பொதுமக்கள் இனி நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு அசல் ரேஷன் அட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ரேஷன் கார்டின் மின்னணு வடிவம் அல்லது ரேஷன் அட்டை எண் மட்டுமே இருந்தாலே நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை எளிதாகப் பெற முடியும். இந்த நடவடிக்கை பொதுமக்களின் சிரமத்தைக் குறைத்து, பொருள்களை வாங்கும் நடைமுறையை மேலும் எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள பெரிய ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிதாக 150 நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் விரைவாகவும் சிரமமின்றியும் தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் தொடர்பான தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.