திக் திக்… குழந்தையைத் தோளில் சுமந்த… நபர் மீது விழுந்த ராட்சத பாம்பு… அருவியில் உரைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ… மகாராஷ்டிராவில் அரங்கேறிய சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 17, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்போலி அருவியில் சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. தனது குழந்தையைத் தோளில் சுமந்தபடி அருவியில் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் மீது, மேலிருந்து திடீரென ஒரு பெரிய பாம்பு விழுந்தது.

இந்த எதிர்பாராத சம்பவத்தைக் கண்டதும் அங்கிருந்த சுற்றுலாவாசிகள் கடும் அதிர்ச்சியடைந்து அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓடத் தொடங்கினர். பாம்பு விழுந்தபோதிலும், அந்த நபர் பதற்றமடையாமல் தைரியமாகச் செயல்பட்டுத் தனது குழந்தையைப் பாதுகாப்பாகப் பிடித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்.

   

இந்த திடுக்கிடும் சம்பவம் அங்கிருந்த சிலரால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. பருவமழைக் காலத்தில் அருவிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சுற்றியுள்ள ஆபத்துகளை உணர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினரும் அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.