ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நெஞ்சை பதறவைக்கும் கும்பல் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 15 வயது தலித் சிறுமியை அடைத்து வைத்துப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, சுமார் 100 முதல் 150 பேர் கொண்ட ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று முகமது இம்ரோஸ் என்பவரது வீட்டிற்குச் சென்றுள்ளது. வீட்டின் உரிமையாளரான இம்ரோஸின் தந்தையை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து, மரத்தில் கட்டி வைத்து அக்கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது.
தனது தந்தையைக் காப்பாற்றுவதற்காக ஓடிவந்த இம்ரோஸை, அந்தப் பெருங்கும்பல் தடி மற்றும் கற்களால் கொடூரமாகக் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரை உஷாரான காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
