“என்னை விட்டுவிடுங்க” பெண் காவலரை நிர்வாணப்படுத்தி தாக்கிய கும்பல்… உயிருக்கு பயந்து கதறி அழுது மன்றாடிய நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

By Soundarya on தை 3, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் தம்னார் பகுதியில் பெண் காவலர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள தம்னார் பகுதியில், பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரை ஆத்திரமடைந்த ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்கியுள்ளது. அந்தப் பெண் காவலரின் ஆடைகளைக் களைந்து அவரைத் தரக்குறைவாக நடத்தியதோடு, உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். அப்போது அந்தப் பெண் காவலர், “சகோதரரே, தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள், நான் இனி இங்கே வரமாட்டேன்” என உயிருக்குப் பயந்து கதறி அழுது மன்றாடியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சீருடையில் இருக்கும் ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக ஆளும் இந்த மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் கார்ப்பரேட் நலன்களுக்காகப் பழங்குடியின மக்கள் மற்றும் காவலர்கள் நசுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக காவல்துறை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.