ராஜஸ்தான் மாநிலக் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், பரபரப்பான நெடுஞ்சாலையில் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது போக்குவரத்து விதிகள் மீறல் மற்றும் பொதுப் பாதுகாப்பு குறித்த பரவலான விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. வீடியோவில் உள்ள பெண், பிரியங்கா ஷெகாவத் என்ற ராஜஸ்தான் காவல்துறை கான்ஸ்டபிள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். காட்சிகளின்படி, நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு மினி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டிருந்த பெரிய ஸ்பீக்கரில் பாடல்கள் சத்தமாக ஒலிக்க, வாகனத்தின் அருகே பலருடன் சேர்ந்து பிரியங்கா நடனமாடுகிறார்.
இந்தச் செயல் போக்குவரத்து இடையூறை ஏற்படுத்துவதுடன், நெடுஞ்சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதாகப் பரவலாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே போக்குவரத்து விதிகளை மீறிச் செயல்பட்டது, சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…
சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…