ராஜஸ்தான் மாநிலக் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், பரபரப்பான நெடுஞ்சாலையில் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது போக்குவரத்து விதிகள் மீறல் மற்றும் பொதுப் பாதுகாப்பு குறித்த பரவலான விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. வீடியோவில் உள்ள பெண், பிரியங்கா ஷெகாவத் என்ற ராஜஸ்தான் காவல்துறை கான்ஸ்டபிள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். காட்சிகளின்படி, நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு மினி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டிருந்த பெரிய ஸ்பீக்கரில் பாடல்கள் சத்தமாக ஒலிக்க, வாகனத்தின் அருகே பலருடன் சேர்ந்து பிரியங்கா நடனமாடுகிறார்.
अगर आप @PoliceRajasthan में कांस्टेबल हैं, तो किसी भी हाईवे पर अपनी गाड़ी रोक कर बीच सड़क पर डांस कर सकते हैं, कोई कारवाई नहीं होगी!
ऐसा ही कांस्टेबल प्रियंका शेखावत कर रही है,
अगर यह कांस्टेबल नहीं होती तो अब तक कारवाई हो चुकी होती,
वैसे सारे नियम कानून गरीबों के लिए बने हैं। pic.twitter.com/59HJM8DYd9— Pappu Ram Mundru Sikar (@PRMundru) December 14, 2025
இந்தச் செயல் போக்குவரத்து இடையூறை ஏற்படுத்துவதுடன், நெடுஞ்சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதாகப் பரவலாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே போக்குவரத்து விதிகளை மீறிச் செயல்பட்டது, சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
