இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் மொபைல் போன் மற்றும் ஐபேட் அடிமைத்தனம் பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தொடக்கத்தில் அமைதிக்காகத் தரப்படும் இந்தச் சாதனங்கள், பின்னாளில் குழந்தைகளின் உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கும் போதையாக மாறிவிடுகிறது. இதனை முறியடிக்க தாய்லாந்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் கையாண்ட வினோதமான தந்திரம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது மகன் ஐபேட் பயன்பாட்டிற்கு அடிமையானதை மாற்ற, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கண்களைச் சுற்றி கருப்பு நிற மேக்கப் செய்துள்ளார்.
🚨A Thai father got fed up with his son’s addiction to the iPad and electronic devices.
He used a trick to stop the addiction — while the child was asleep, he put makeup around his eye, then showed him the iPad and said, “This is because of it.” pic.twitter.com/stRskDAbbP— GPX (@GPX_Press) January 27, 2026
