பெற்ற மகளையே மனைவியாக்கிய தந்தை.. பிறந்த குழந்தையோடு சேர்த்து 3 பேரைக் கொன்றுவிட்டுத் தற்கொலை.. அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

By Muthu Mani on வைகாசி 25, 2026

Spread the love

அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது சொந்த மகள், அவர்களின் குழந்தை மற்றும் மகளின் வளர்ப்புத் தந்தை ஆகியோரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. ஸ்டீவனுக்கும் அவரது மனைவி அலிசாவிற்கும் பிறந்த குழந்தைதான் கேட்டி. சிறு வயதிலேயே தத்து கொடுக்கப்பட்ட கேட்டி, தனக்கு 18 வயதானபோது சமூக ஊடகங்கள் வழியாகத் தனது சொந்தப் பெற்றோரைத் தேடிக் கண்டுபிடித்துள்ளார். அதன் பிறகு, அலிசாவை விவாகரத்து செய்த ஸ்டீவன், தனது சொந்த மகள் என்றும் பாராமல் கேட்டியுடன் முறையற்ற பாலியல் உறவை ஏற்படுத்திக் கொண்டு அவரைத் திருமணமும் செய்துகொண்டார்.

இந்த விசித்திரமான மற்றும் முறையற்ற உறவின் மூலம் கேட்டிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட தொடர் கருத்து வேறுபாடுகள் மற்றும் ஸ்டீவனின் வன்முறை நடத்தை காரணமாகக் கேட்டி அவரை விட்டுப் பிரிய முடிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்டீவன், கடுமையான கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டார். துப்பாக்கியுடன் வேட்டையாடக் கிளம்பிய அவர், வட கரோலினாவில் உள்ள தனது வீட்டில் இருந்த கேட்டியின் பிஞ்சுப் பாலகனைக் கொடூரமாகக் கொலை செய்தார்.

   

அதன் தொடர்ச்சியாக, நூற்றுக்கணக்கான மைல்கள் பயணித்துச் சென்று, தனது சொந்த மகளும் மனைவியுமான 20 வயது கேட்டி பிளாட்ல் மற்றும் அவரை வளர்த்த வளர்ப்புத் தந்தையான 56 வயது அந்தோனி ஃபுஸ்கோ ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். அவர்களின் சடலங்கள் ஒரு லாரியில் கண்டெடுக்கப்பட்டன. இந்த அடுத்தடுத்த கொடூரக் கொலைகளைச் செய்து முடித்த பின், ஸ்டீவன் தனது தாயைத் தொலைபேசியில் அழைத்து விபரத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நியூயார்க்கின் டோவர் பகுதியில் உள்ள ஒரு மினி வேனில், ஸ்டீவன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.