ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை நகைச்சுவையுடனும் நெகிழ்ச்சியுடனும் வெளிப்படுத்தும் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரிஷிதா மிஸ்ரா என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், தங்களது அன்றாட வாழ்க்கை முறையைப் பற்றி அவர் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும், பின்னால் நிற்கும் அவரது தந்தை புன்னகையுடனும் செய்கைகளாலும் மறுப்பது பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
View this post on Instagram
வீடியோவின் தொடக்கத்தில், “நாங்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவோம்” என்று ரிஷிதா கூற, அவரது தந்தை அது பொய் என்பது போலத் தலையசைத்துச் சிரிக்கிறார். தொடர்ந்து, “நாங்கள் தினமும் பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெறுவோம்” என்று அவர் கூறும்போது, அவரது தந்தை அதீதச் சிரிப்புடன் அது முற்றிலும் பொய் என சைகை செய்கிறார். தந்தை-மகள் இடையேயான இந்த எதார்த்தமான மற்றும் அன்பான உரையாடல், இணையவாசிகளின் மனதை வென்று மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது.
