கையெழுத்து போடுறியா?… இல்ல சுடவா?… பெற்ற மகனே தந்தையின் நெஞ்சில் துப்பாக்கி… கார் கடனால் குடும்பத்தில் நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

காசியாபாத்தின் சாஹிபாபாத் பகுதியில் கார் கடன் சரிபார்ப்பு தொடர்பாக குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியது. இதில், ஒரு பெண் தன் தந்தை மற்றும் அண்ணி மீது துப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டும் அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கார் கடனுக்கான ஆவணங்களில் தந்தை கையொப்பமிட்டு சரிபார்க்க மறுத்ததே இந்த மோதலுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், குடும்பத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சூழ்நிலையை வன்முறைக்களமாக மாற்றியுள்ளார்.

   

வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தத் தொடர் சம்பவங்கள் அனைத்தும் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் ஆயுதத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.