mgr

வினோதமான உதவியை கேட்ட இயக்குனர்… தலையில் அடித்துக்கொண்ட MGR…

By admin on கார்த்திகை 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் உச்சபச்ச நடிகராகும் புகழ் பெற்ற நடிகராகவும் இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காதா இடம் பிடித்தவர் MGR. அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் MGR.

   

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க வந்த MGR பின்னர் நடிகராக உயர்ந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அர்பணிப்போடு பணியாற்றினார் MGR. இவரது படங்களில் ஆக்சன் காட்சிகள் திராவிட சிந்தனைகள் சமூக நீதி கருத்துக்கள் இருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.

   

MGR படம் என்றாலே ஹிட்தான் என்ற அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார் MGR. தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி நடத்தினார்.

 

தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்து மறைந்தவர் எம்ஜிஆர். ஒரு நல்ல மனிதர் உதவும் மனப்பான்மை கொண்டவர். வாரி கொடுக்கும் வள்ளல் என்பதற்கு பல சம்பவம் சான்றாக இருக்கிறது. அதில் ஒன்றை இனி காண்போம்.

எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகு ஏவியம் ஸ்டூடியோவில் ஒரு படம் பார்க்க சென்றிருக்கிறார். அங்கு படம் பார்த்துவிட்டு வெளியே வந்து அங்கு இருந்தவர்களிடம் மக்களிடம் நலம் விசாரித்துக் கொண்டே வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இயக்குனர் எம்ஜிஆரை பார்த்ததும் வணக்கம் ஐயா என்று கூறினார். உடனே எம்ஜிஆர் உனக்கு என்னய்யா வேணும் நீ எதுவுமே கேட்காமல் இருக்க அப்படின்னு கேட்டிருக்கிறார் எம்ஜிஆர்.

உடனே பதட்டப்பட்ட அந்த இயக்குனர் எனக்கு உங்க வீட்டு சிக்கன் நெய் ரோஸ்ட் வேணும் அப்படின்னு கேட்டிருக்கிறார். உடனே தலையில் அடித்துக் கொண்ட எம்ஜிஆர் அவனவன் என்ன எல்லாம் உதவி கேட்கிறான் உனக்கு என் வீட்டு சிக்கன் ரோஸ்டு தான் வேணுமா அப்படின்னு சொல்லிட்டு போயிருக்கிறார். அதே போல் மறுநாள் எம்ஜிஆர் வீட்டில் இருந்து அந்த இயக்குனருக்கு சிக்கன் நெய் ரோஸ்ட் சென்று இருக்கிறது. அந்த உதவி கேட்ட இயக்குனர் எஸ் பி முத்துராமன் அவர்கள் தான். இப்படி சொன்ன சொல்லை தவறாமல் யார் எதை கேட்டாலும் உடனே செய்து விடுவாராம் எம் ஜி ஆர்.