அடியாத்தி…! மொத்தம் 800 கிலோ…. பல்லால் காரை இழுத்துச் செல்லும் பக்தர்… அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா…?ஹரித்வார் நோக்கிப் படையெடுக்கும் காவடிப் பக்தரின் அபார சாதனை…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அனலைட் மற்றும் பிற பகுதிகள் வழியே தற்போது ஏராளமான காவடி பக்தர்கள் ஹரித்வார் நோக்கிப் பயணித்து வருகின்றனர். இந்நாட்களில் அலிஹாட் பகுதியைச் சேர்ந்த நரேந்திர ஜாட் என்பவர் தனது அபாரமான பக்தியால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சுமார் 800 கிலோ எடைகொண்ட நான்கு சக்கர வாகனத்தின் மேற்கூரையில் சிவபெருமானின் சிலையை அமைத்து, அந்த காரை தனது பற்களால் கயிற்றைப் பிடித்து இழுத்தபடி ஹரித்வார் நோக்கிப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

“பசுமாட்டிற்கு தேசிய மாதா அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்” என்ற உயரிய கோரிக்கையை முன்வைத்து, இந்த கடினமான நேர்த்திக்கடனை அவர் தொடங்கியுள்ளார். ஹரித்வாரை அடைந்ததும் அங்கிருந்து புனித கங்கை தீர்த்தத்தைச் சேகரித்துக் கொண்டு மீண்டும் தனது சொந்த ஊரான அலிஹாட்டுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளார். பக்தி உணர்வின் வலிமைக்கு முன்னால் எந்த எடையும் ஒரு தடையில்லை என நரேந்திர ஜாட் நிரூபித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.