மனிதநேயம் முற்றிலுமாக செத்துப்போய்விட்டதா என்று கேள்வி எழுப்பும் வகையில், விலங்குகளைக் கொடூரமாக வேலை வாங்கிச் சித்திரவதை செய்யும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல் சூளைகள் மற்றும் சுமை தூக்கும் இடங்களில் விலங்குகளின் சக்திக்கு மீறிய பாரத்தை ஏற்றி, அவற்றின் உடலை வாட்டி வதைக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அவ்வாறு பாரம் தாங்காமல் வேதனையில் தவிக்கும் விலங்கைக் கண்டு இரக்கப்படாமல், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதை வேடிக்கை பார்த்தபடி கடந்து செல்லும் காட்சிகள் காண்போரின் நெஞ்சைப் பிழியும் வகையில் அமைந்துள்ளன.
இந்தக் கொடூரச் செயலுக்கு விலங்கு உரிமை ஆர்வலர்களும், சமூக வலைதள பயனர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்குக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
