தனது அவசர அறுவை சிகிச்சை நடந்த நாளில் கூட வேலை செய்யுமாறு மேலாளர் வற்புறுத்தியதாக ஊழியர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள வேதனைப் பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. கடந்த ஓராண்டாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் உழைத்த அந்த ஊழியருக்கு, கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்ட சூழலிலும் நிறுவனத்தின் தரப்பில் இருந்து அதிக வேலைச்சுமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து அவர் ரெடிட் (Reddit) தளத்தில் பதிவிட்ட செய்தி, தற்போது கார்ப்பரேட் வேலை கலாச்சாரம் பற்றிய பெரிய விவாதத்தை நெட்டிசன்களிடையே கிளப்பியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் மேலாளர் தன்னிடம் வேலை வாங்கியதாக அந்த ஊழியர் பகிர்ந்துள்ள நிலைக்கு, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “எல்லாவற்றையும் விட உடல்நலனே முதன்மை” என்று நெட்டிசன்கள் பலரும் அந்த ஊழியருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவதுடன், ஊழியர்களின் அடிப்படை உரிமைகளையும் நல்வாழ்வையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
