Categories: சினிமா

புத்திசாலித்தனமாக யோசித்த GOAT பட தயாரிப்பாளர்.. நாளைக்கு நம்மளுக்கு எந்த பிரச்சினையும் வந்திரக்கூடாது இல்ல..!

Spread the love

கோட் பட தயாரிப்பாளர் புத்திசாலித்தனமாக யோசித்து படத்தை டிஸ்ட்ரிபியூட் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது கோட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கின்றார். ags நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கின்றார். மேலும் இப்படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள்.

இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நடிகர் விஜய் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் விஜய் கட்சி வேலைகளிலும் பிஸியாக இறங்கி இருக்கின்றார். இவரின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது தொடர்பான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்குகளை வாங்கியது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ராகுல்.

கிட்டத்தட்ட 80 கோடிக்கு மேல் செலவு செய்த படத்தை வாங்கி இருக்கிறாராம். அவர் வாங்கிய நிலையிலும் எந்த விநியோகித்தரும் அவரை அணுகி படத்தை வாங்குவதற்கு முன்வரவில்லை. எல்லாரும் மிக அமைதியாக இருக்கிறார்களாம். ஏனென்றால் ராகுல் டிஸ்ட்ரிபியூசனில் வெளியிட பிளானில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் அது உண்மை இல்லை என்றும் ராகுல் இந்த படத்தை யார் கேட்டாலும் கொடுக்க மாட்டார் என்று கூறப்படுகின்றது.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை விற்கும் போது ஒரு கண்டிஷன் ஒன்று போட்டிருக்கிறார்களாம். உங்களுக்கு தமிழ்நாடு திரையரங்குகளை தருகிறோம். நீங்கள் தான் தமிழ்நாடு முழுக்க ரிலீஸ் செய்ய வேண்டும். இதனை ரேட்டை அதிகமாக வைத்து ஏரியா வாரியாக விற்பனை செய்யக்கூடாது.

இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கைமாறும்போது அதிக தொகைக்கு டிக்கெட் விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஒருவேளை படம் நன்றாக ஓடவில்லை என்றால் ரீபண்ட் கொடுங்கள் என்று அனைவரும் தங்களிடம் வந்து நிற்பார்கள் என்பதற்காக புத்திசாலித்தனமாக யோசனை செய்து கோட் திரைப்படத்தை தமிழகம் முழுக்க ஒரு நிறுவனம் மட்டும்தான் வெளியிட வேண்டும் என்று ஸ்ட்ரிட்டாக கூறிவிட்டார்களாம் ஏஜிஎஸ் நிறுவனம்.

Mahalakshmi

Recent Posts

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 minutes ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 minutes ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

13 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

17 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

18 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

23 minutes ago