பீகார் மாநிலம் போஜ்பூரில் திருமண மேடையில் மணமகன் காத்திருக்க, மணப்பெண் தனது குடும்பத்தாருடன் திருமணத்தை புறக்கணித்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான அந்தப் பெண்ணிற்கு, 36 வயதுடைய ஆணுடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மேலும் மணமகனை நேரில் பார்த்த மணப்பெண், “அவர் பார்ப்பதற்கு எனது சித்தப்பா அல்லது பெரியப்பாவைப் போல வயதானவராகத் தெரிகிறார் என் உயிரே போனாலும் அவரைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” எனக் கூறி பாதியிலேயே வெளியேறினார். மணமகன் வீட்டார் எவ்வளவோ சமாதானம் செய்தும், அந்தப் பெண் தனது முடிவில் உறுதியாக இருந்து அங்கிருந்து கிளம்பினார். மறுபுறம், திருமண உடையில் மேடையில் அமர்ந்திருந்த மணமகன் கண்ணீர் மல்க தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் “இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றால் அவர் முதலிலேயே மறுத்திருக்கலாம், அதை விடுத்து ஊர் அறிய மேடை வரை வந்த பிறகு இப்படிச் செய்தது எனக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டது” என்று அவர் கதறினார். வயது இடைவெளி காரணமாக ஒரு திருமணம் மேடை வரை வந்து நின்ற இந்தச் சம்பவம், தற்போது அந்தப் பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…