ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு ஷர்மா என்ற இளம்பெண், தனது பகுதியில் பணியாற்றி வந்த ரித்திக் யாதவ் என்ற இளைஞருடன் காதலில் இருந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது தொடர்பாகக் காவல்துறை வரை புகார் சென்றது. காவல்துறையின் எச்சரிக்கைக்குப் பயந்த ரித்திக், ராஜஸ்தானை விட்டு வெளியேறி உத்தரப்பிரதேச மாநிலம் மெயன்புரியில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.
இருப்பினும், காதலனைத் தேடி ரிங்கு ஷர்மாவும் மெயன்புரிக்கே வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், மீண்டும் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலக் காவல்துறையினர் உத்தரப்பிரதேச போலீசாரின் உதவியுடன் மெயன்புரிக்கு விரைந்தனர்.
“>
மேலும் அங்கு தங்கியிருந்த ரிங்கு ஷர்மாவை மீட்ட காவல்துறையினர், அவரை மீண்டும் ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றனர். தான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், குடும்பத்தினர் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும் அந்தப் பெண் அச்சம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பு கருதி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…