அட கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 24, 2026

Spread the love

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில், நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் அபூர்வமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை மூன்று கிலோ எடையில் உள்ளது. இந்த விசித்திரமான நிகழ்வைக் கேள்விப்பட்ட சுற்றியுள்ள பகுதி மக்கள், குழந்தையைப் பார்ப்பதற்காகச் சுகாதார மையத்தில் பெருமளவில் திரண்டுள்ளனர்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, தாயின் கருப்பையில் இரண்டு கருக்கள் வளர்ந்துள்ளன. அதில் ஒரு கரு முழுமையாக வளர்ச்சி அடையாமல், மற்றொரு பிரதான குழந்தையுடன் இணைந்துவிட்டது. மருத்துவ உலகில் இது மிகவும் அரிதான “இணைந்த இரட்டையர்கள்” வகையைச் சேர்ந்த பாதிப்பாக விவரிக்கப்படுகிறது.

   

https://twitter.com/madanmohansoni/status/2091817168916586769/video/1

   

தற்போது குழந்தையும் தாயும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து கூடுதல் உறுப்புகளைப் பிரிக்க முடியுமா என்பது குறித்து மேல் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக நிபுணர்கள் அடங்கிய குழு ஆலோசித்து வருகிறது.