இரண்டாவது மாடியில் இருந்து குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஏழுகிணறு பகுதியில் இரண்டாவது மாடியில் இருந்து இரண்டு வயது குழந்தை தவறி விழுந்து உள்ளது. வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கம்பிகளுக்கு இடையில் புகுந்து தவறி விழுந்து உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை தவறி விழுந்த சிசிடிவி காட்சியும் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
