ரூ.2,250 ஆக உயர்த்தியது தமிழக அரசு… இரட்டிப்பு மகிழ்ச்சி… காலையிலேயே சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on தை 22, 2026

Spread the love

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் (ஆவின்) பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கருணை ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்த ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கிய முடிவை அரசு எடுத்துள்ளது. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிய பணியாளர்களுக்கு இந்த நிதிச் சலுகை ஒரு பெரிய நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணை குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கருணை ஓய்வூதியம் ரூ4,500-லிருந்து ரூ.5,000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ரூ.2,000-லிருந்து ரூ.2,250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.