ரோட்டைக் கடக்க முயன்ற ராட்சத மலைப்பாம்பு ஒன்றைக் கண்டு, அசம்பாவிதம் ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காகச் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது வாகனங்களை நிறுத்தி அமைதியாகக் காத்திருந்தனர். ஆனால், நிலைமையை உணராத ஒரு அதிவேகக் கார் ஓட்டுநர், சாலையின் நடுவே பாம்பு இருப்பதைக் கவனிக்காமல் அதை நோக்கி அதிவேகமாக வந்துள்ளார்.
காத்திருந்த மற்ற வாகன ஓட்டிகள் சைகை காட்டிக் கத்தியபோதிலும், அந்த வேகமான கார் நிற்காமல் பாம்பு மீது ஏறிச் சென்றது. காரின் சக்கரம் பட்டதில் பாம்பு படுகாயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்தது. மற்ற வாகன ஓட்டிகள் பொறுமையுடன் காத்திருந்த வேளையில், இந்த ஓட்டுநரின் அலட்சியமான செயல் அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கியது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. வனவிலங்குகளின் உயிரைப் பொருட்படுத்தாமல் காரை இயக்கிய அந்த ஓட்டுநர் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்களும் வனவிலங்கு ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
