“யார்கிட்டையாவது சொன்னா கொலை பண்ணிடுவேன்”….. 12 வயது சிறுமியை மிரட்டி 4 மாதங்களாக சீரழித்த 56 வயது நபர்…. தாம்பரத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

தாம்பரம் அருகே பிரியாணி கடை உரிமையாளர் ஒருவர், தனது கடையில் பணிபுரியும் மாஸ்டரின் 12 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த ஆதி நகர் பகுதியில் பிரியாணி தயாரிக்கும் குடோன் மற்றும் கடையை நடத்தி வரும் முகமது யூசுப் (56) என்பவரே இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அங்கு மாஸ்டராக வேலை பார்க்கும் நபர், பள்ளி விடுமுறை நாட்களில் தனது மகளை வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், அந்தச் சிறுமியின் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட உரிமையாளர் கடந்த நான்கு மாதங்களாக இப்பாதகச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இதுகுறித்துத் தந்தையிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் அச்சிறுமியை மிரட்டிப் பணிய வைத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, சிறுமியின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற சமயம் பார்த்து முகமது யூசுப் மீண்டும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தந்தை திடீரென உள்ளே வர, பயந்துபோன சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரங்கள் அனைத்தையும் கண்ணீர் மல்கக் கூறி கதறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த தந்தை, இச்சம்பவம் குறித்துச் சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

   

பாதிக்கப்பட்ட தந்தையின் புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மகளிர் போலீசார், சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வழக்குப் பதிவு செய்து, பிரியாணி கடை உரிமையாளர் முகமது யூசுப்பை போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பகுதியில் அரங்கேறிய இந்த அநீதி, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.