“30 நாளில் தவெக ஆட்சி கவிழும்னு ஸ்டாலின் சொன்ன ரகசியம் இதுதான்”… உடனே பதவி விலக வேண்டும்… போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்…. அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

திமுகவை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற வேண்டுமெனில், அக்கட்சியில் இருந்து அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் விலக வேண்டும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

“வெறும் 30 நாள்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கவிழும் என்று எந்த நம்பிக்கையின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் பேசினார்?” என்று கேள்வி எழுப்பிய நிர்மல் குமார், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) விலைக்கு வாங்கி, எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், திட்டமிட்ட எண்ணத்துடனும்தான் ஸ்டாலின் அவ்வாறு பேசியிருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அறிக்கை தற்போது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.