மாநிலம் முழுவதும் மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் வழங்குவது குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் CM விஜய் அறிவிக்கவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜூன் 16-ம் தேதி அவர் ஆலோசனை நடத்தியதாகவும் செய்தி கூறுகிறது.
இதனைத் தொடர்ந்து, TNSTC-ன் 8 கழகங்கள் வாரியாக அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றதாம். இத்திட்டத்தால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு மற்றும் வருவாயைப் பெருக்கும் வழிகள் இதில் இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
