தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இடமளிக்க முதலமைச்சர் முன்வந்துள்ளதாக தனியார் நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போதைய அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், வைகோவை கடையநல்லூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் 2 எம்.எல்.ஏ-க்கள், தவெக அரசுடனான இந்த புதிய அரசியல் நகர்வுகளுக்காக தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்ற முக்கியமான கேள்வியும் தற்போதைய அரசியல் சூழலில் எழுந்துள்ளது.
