வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான மாதம் ₹4,000 உதவித்தொகையைப் பெற, தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை உடனடியாகப் புதுப்பித்து வைத்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவெக அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருவதால், தகுதியான பயனாளிகள் தங்களின் ஆவணங்களைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் 29 வயதுக்கு மேற்பட்ட வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அரசுப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்களுக்குப் பெரும் பொருளாதார உதவியாக இருக்கும் எனப் பேசப்படுகிறது.
