தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமாவார். ‘பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானா.ர் இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான ‘தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதை’ பெற்றார்.
இதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், பிரியாணி, கொம்பன் என்று பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். தற்பொழுது இவர் நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பையும், திரையரங்குகளில் நல்ல வசூலையும் வாரி குவித்து வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பொன்னியின் செல்வன் சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்பில் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறது. நடிகர் கார்த்தி அமெரிக்காவில் எம் எஸ் பட்டம் படிக்க சென்றபோது, திரைப்பட இயக்குனர் அதற்கான கல்வியிலும் தேர்ச்சி பெற்றார்.
சென்னை திரும்பிய அவர் அண்ணன் சூர்யாவை கதாநாயகனாக வைத்து ‘மணிரத்தினம்’ தயாரித்து இயக்கிய ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் உதவிய இயக்குனராக பணியாற்றினார். தற்பொழுது அவர் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து இயக்குனராக பணியாற்றிய போது ஆயுத எழுத்து பட சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்……