முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட இந்த முக்கிய நடவடிக்கை, மதுவற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான முதல் படியாக அரசியல் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இருப்பினும், இந்த 500 மீட்டர் சுற்றளவு எல்லைகளைத் துல்லியமாகக் கணக்கிடுவதிலும், சம்பந்தப்பட்ட கடைகளை அடையாளம் காண்பதிலும் கள அளவில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் குழப்பங்களும் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதிகாரிகளின் மறுஆய்வு மற்றும் துல்லியமான கணக்கெடுப்புப் பணிகள் முடியும் வரை, தற்காலிகமாக இந்த டாஸ்மாக் கடைகள் மூடல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
