திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தான் கூறிய கருத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தற்போது பின்வாங்கியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஊடகங்களில் கிசுகிசுக்களாக வெளியான செய்தியை அடிப்படையாக வைத்தே நான் அவ்வாறு பேசினேன்; மற்றபடி திமுக அல்லது அதிமுக தரப்பிலிருந்து யாரும் அதிகாரப்பூர்வமாக என்னைத் தொடர்பு கொள்ளவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்திலேயே தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், விசிக தற்போதும் திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
