வாரண்ட் இல்லாமல் டிஎஸ்பி கேட்ச் பிடிக்க மாட்டார்..! முகமது சிராஜை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

By Swetha on வைகாசி 16, 2026

Spread the love

ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் செய்த மிக எளிய கேட்ச் தவறவிடல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் கொடுத்த மிக எளிய கேட்ச் வாய்ப்பை சிராஜ் தவறவிட்டார். அண்மையில்தான் சிராஜ் தெலங்கானா காவல்துறையில் டிஎஸ்பி ஆகப் பொறுப்பேற்றிருந்த நிலையில், இந்தத் தவறவலைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் அவரைத் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஃபின் ஆலன் கொடுத்த இந்த எளிமையான கேட்ச்சை சிராஜ் கோட்டைவிட்டதால், அவருக்கு ஒரு நல்வாய்ப்பு கிடைத்தது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆலன், அதிரடியாக விளையாடி வெறும் 21 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்து குஜராத் அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார். சிராஜ் அதே போட்டியில் அஜின்கியா ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்தி தனது 200-வது டி20 விக்கெட் சாதனையைப் படைத்த போதிலும், இந்த கேட்ச் டிராப் அவரது சாதனையைச் சற்றே நிழலாடச் செய்துவிட்டது.

   

முகமது சிராஜின் இந்தத் தவறவலைக் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் எக்ஸ் (ட்விட்டர்) போன்ற சமூக வலைதளங்களில் மீம்களைப் பறக்கவிட்டு வருகின்றனர். குறிப்பாக, “டிஎஸ்பி (DSP) வாரண்ட் இல்லாமல் யாரையும் பிடிக்க மாட்டார் போல” என்றும், “கைதிகளைப் பிடிப்பதில் காட்டும் வேகத்தைக் சிராஜ் பந்தைப் பிடிப்பதில் காட்டவில்லை” என்றும் நகைச்சுவையாகவும் நையாண்டியாகவும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து இந்தச் சம்பவத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.