கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களைக் கண்காணிக்க போலீசார் ‘மஃப்டி’ உடையில் ரோந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு 10 மணிக்கு மேல் மதுபானக் கூடங்களில் (பார்) யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக வெளியே அனுப்ப வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பார் மூடப்பட்டதை உறுதி செய்ய, அதனைப் புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்தச் செய்தி அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
