அதிமுகவில் அதிகாரப்பூர்வ பிளவு… இபிஎஸ் பிடியில் வெறும் 17 எம்.எல்.ஏ-க்கள்.. வேலுமணி பக்கம் சாய்ந்த 30 பேர்… பரபரக்கும் அரசியல்..!!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுக உட்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற மொத்தமுள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ-க்களில், 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த 17 எம்.எல்.ஏ-க்களும் இன்று சட்டப்பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

அதேசமயம், மீதமுள்ள 30 எம்.எல்.ஏ-க்கள் எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தத் தீவிரமாக மனு அளித்துள்ளது. சட்டப்பேரவை கூடும் முதல் நாளிலேயே அதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.